புது தில்லியில் தொடங்கியது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்
Published : Jun 23, 2026 11:13:20 AM - a month ago
புது தில்லி பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு மற்றும் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் கதிர் நிசாமிபூர் ஆகியோரை வரவேற்றார். பின்னர், பங்கேற்ற அனைத்து நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்
16வது BRICS தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்துக்கு ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, இந்தியா வந்தடைந்தார்
இந்தியா நடத்தும் பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின் இரண்டாவது நாள் இந்தக் கூட்டத்திற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தலைமை தாங்குகிறார்.
இந்தக் கூட்டத்தின் போது, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் தூதுக்குழுத் தலைவர்களும் "இன்று உலகம் எதிர்கொள்ளும் மரபுசாரா பாதுகாப்பு சவால்கள்" என்ற தலைப்பில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.
வேகமாக மாறிவரும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் தன்மை மற்றும் புதிய பாதுகாப்பு சவால்களை உருவாக்குவதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்கு குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள்.
2026-ல் இந்தியா பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்பது 4 வது முறையாகும்; 2012, 2016 மற்றும் 2021-ல் இப்பதவியை இந்தியா வகித்துள்ளது. 2025 ரியோ உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் எடுத்துரைக்கப்பட்ட மக்கள் மைய மற்றும் மனிதநேயத்திற்கு முதலிடம் என்ற அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் வகையில், "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்" என்ற கருப்பொருளால் இந்தத் தலைமைப் பொறுப்பு வழிநடத்தப்படுகிறது.
பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பதினொரு முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை பிரிக்ஸ் அமைப்பு தற்போது ஒன்றிணைக்கிறது.
மேலும் , பொருளாதாரப் பிரச்சினைகள் மீதான அதன் அசல் கவனத்திலிருந்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு, மற்றும் கலாச்சார மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் ஆகிய 3 முக்கியத் தூண்களாக விரிவடைந்துள்ளது.
இப்போது பயங்கரவாத எதிர்ப்பு, காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு, சர்வதேச நிதிக் கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, விவசாயம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, வர்த்தகம், மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளது என்றும் அது குறிப்பிடுகிறது.
பிரிக்ஸ் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், சவால்கள் குறித்து உறுப்பு நாடுகளிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
