பதில் சொல்வதை காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.அமைச்சர் செங்கோட்டையன்
Published : Jun 09, 2026 03:28:24 PM - 2 months ago
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “வருவாய் துறையில் மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதித் சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். ரேஷன் கார்டுகள், முதியோர் உதவித் தொகை, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை எப்படி எளிதாக கிடைக்கும் வகையில் நிறைவேற்றுவது என ஆய்வு செய்ய உள்ளோம்.
முதல்வர் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மாரிதாஸ் எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என சட்ட ரீதியாக தெரியவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது தனிப்பட்ட விமர்சனமாக இல்லாமல் மக்கள் வளர்ச்சிப் பணிகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாடே வளர்ச்சியடையும்.” என்று தெரிவித்துள்ளார்.
