News
தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது? அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை கேள்வி.
Published : Jun 08, 2026 02:11:25 PM - 2 months ago
தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது? டாஸ்மாக் மூலம் ஈட்டும் வருவாயை கள் விற்பனையிலும் ஈட்டலாமே? - அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை கேள்வி*
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை விவசாயி மணிகண்டன் என்பவரை, கள் இறக்குவதாக எஸ்.ஐ. இசக்கிராஜா சுட்டுப் பிடித்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மணிகண்டனின் தந்தை மனு
இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ‘புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் கள் விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்கிறது. தமிழ்நாட்டிலும் அனுமதித்தால் என்ன?’ எனக் கேள்வி
சிபிஐ விசாரணை கோரியது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி நாளை மறுதினம் விசாரணை ஒத்திவைப்பு
