மேயர் ஆர்.பிரியா - திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி இடையே சர்ச்சை
Published : Jun 05, 2026 10:18:10 AM - 2 months ago
சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில் மேயர் ஆர்.பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி மற்றும் கல்வித்துறை இணை ஆணையர் கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் புளியந்தோப்பு மன்னார்சாமி கோயில் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, மேயர் பிரியா ரிப்பனை வெட்டுவதற்கு முன்பாகவே, அவருக்கு பின்னால் நின்றிருந்த எம்எல்ஏ பல்லவி ரிப்பனை வெட்டினார்.
இந்த விழாவில், முந்தைய சம்பவத்துக்கு சமாதானம் செய்யும் வகையில், மேயர் பிரியா விளக்கேற்றிவிட்டு மெழுகுவர்த்தியை எம்எல்ஏ பல்லவியிடம் நீட்டினார். ஆனால், புளியந்தோப்பு சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, எம்எல்ஏ பல்லவி அதனை வாங்க மறுத்துவிட்டார்.
அதிகாரிகள் வற்புறுத்தியும் அவர் விளக்கேற்ற முன்வராத நிலையில், அவரது ஆதரவாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரு சம்பவங்களும் அங்கிருந்தவர்களிடையே திகைப்பை ஏற்படுத்தியது.
